Thursday, December 11, 2008

Tamils for Obama are conducting an internet opinion poll

" ஈழத் தமிழருக்காக ஒபாமா " கருத்துக்கணிப்பு எங்கள் கருத்துக்களை பதிவு செய்வோம்




Dear Friends,

We Tamils for Obama are conducting an internet opinion poll to test Tamils' view of the proper policy that the Obama administration should execute.

In the democratic world, we think that Tamils should decide their future. It is not, we believe, a matter for the Sri Lankan Singhalese government and military to dictate.

Please take a few minutes to answer the questions in our poll. We are trying to sense the opinions of Tamils throughout world. We are Tamil Americans, but we think that the western world has heard only the opinions of the Singhalese government that rules from Colombo. We hope that we can get an accurate gauge of world wide Tamil thought on this matter.

Therefore we urge every Tamil not only to participate and but also to encourage other Tamil friends and neighbors to participate.

To validate responses and assure a more accurate poll, we will send an email with an activation code to verify each respondent.

To participate in the poll, Tamils who wish to participate can go to

http://www.tamilsforobama.com/poll/vot.asp

We have published our poll in both English and Tamil, so that Tamils who are not fluent in English can participate.

We will continue polling until midnight of December 31, 2008. We will publish the results shortly thereafter. We hope to get a clear message and we plan to distribute this message to the Congress and the new administration.

Please send any comment to info@TamilsforObama.com.



Thank you,

Tamils for Obama – 2008

--


கனடிய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புதொலைபேசி: 416-286-1307மின்னஞ்சல்: tamilcotac@gmail.com http://www.tamilcotac.tk/

Saturday, November 22, 2008

தமிழகத்தை நோக்கி

உறவுப்பாலம்

தமிழக அரசியற் தலைவர்கள், பத்திரிகைகள், வார, மாத சஞ்சிகைகள், சினிமா நடிகர்கள், தொலைக்காட்சி நடிகர்கள் சினிமா தொழிலாளர்கள், தொலைக்காட்சி தொழிலாளர்கள், மாணவ அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், சட்டத்தரணிகள், டாக்டர்கள், தனிமனிதர்கள் என்றெல்லாம் தமிழகமே ஈழத் தமிழரின் துயர் துடைக்க பொங்கி எழுந்துள்ளது, உலகெங்கும் உள்ள தமிழருக்கு ஆறுதல் அளிக்கிறது. உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனும் இவர்கட்கு நன்றி சொல்ல வேண்டும்.

சிங்களத்தின் போர் நிறுத்த மறுப்பும், மஹிந்தவின் போர் தொடர்வதற்கான டெல்லி அறைகூவலும், ரணிலின் நயவஞ்சக டில்லி வழிமொழிவும், தமிழக மக்களுக்கு மட்டுமல்ல உலகத்தமிழர்களுக்கு சிங்களத்தால் செய்யப்பட்ட அவமானமே.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வை.கோ அவர்கள் சொல்வது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் அவர்கள் சொல்வது போல், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த் அவர்கள் சொல்வது போல், பாரதிய ஜனதா கட்சி இல கணேசன் அவர்கள் சொல்வது போல், பாட்டாளி மக்கள் கட்சி, டாக்டர் ராமதாஸ் அவர்கள் சொல்வது போல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர் திருமாவளவன் அவர்கள் சொல்வது போல், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சின்னசாமி அவர்கள் சொல்வது போல், அடுத்த படி நடவடிக்கை என்ன? எனும் கேள்விக்கான பதிலும் தலைவர் கலைஞர் அவர்களின் சாணக்கியத்தாலேயே முடிவு செய்யப்பட வேண்டும்.

உதாரணமாக ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை தமிழகச் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து அங்கீகரித்தால், அதுவே அவர்களின் நிரந்தர நிம்மதியான வாழ்வுக்கு தொடக்கப் புள்ளியாகும். தமிழீழத்தை தமிழ்நாடு அங்கீகரித்தால் மத்திய ஆட்சியில் தமிழகத்தின் பலம் இந்தியா தமிழீழத்தை அங்கீகரிக்க வைக்கும். இவ்வாறான அங்கீகாரத்தின் தொடர் நிகழ்வாக உலகம் முழுவதுமே தமிழீழத்தை அங்கீகரிக்கும்.

தமிழக எழுச்சியும் எங்கள் பங்கும் பணியும்

நாங்கள் தமிழக எழுச்சியை வலுப்படுத்தவும், எமக்கு ஒரு பெருநம்பிக்கையை ஏற்படுதிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகட்கும், செயற்பாட்டாளர்கட்கும் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்ளவும் குறிப்பாக புலம் பெயர்ந்து (கனடாவில்) வாழும் மக்களாகிய நாங்கள் செய்யக்கூடிய சில செயற்பாடுகளை கனடிய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு அண்மையில் அறிவித்துள்ளது.

1) இந்திய மத்திய அரசிற்கு பல்லினசமூகத்தவர்கள் கையெழுத்திட்ட ஈழத்தமிழர்கட்கு ஆதரவு வேண்டிய கையெழுத்தொகுதி மனு, கனடாவில்லுள்ள இந்திய தூதராலயத்தில் கையளித்தல்.

2) ஓவ்வொரு அமைப்பும் தத்தம் அமைப்புகள் சார்பாக நன்றி தெரிவிக்கும் மடலினை தமிழகத்தில் இருக்கும் அரசியற் கட்சிகள் தலைவர்கள், பிரதான ஊடகங்கள் ஆகியவ்ற்றிக்கு தனித்தனியே அனுப்புதல்.

3) எல்லா அமைப்பு மக்களும் கூட்டாக தத்தம் அமைப்புகள் சார்பாக ஈழ தமிழரின் சுயநிர்ணய உரிமையை தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து அங்கீகரிக்க வேண்டு மென்ற ஏகோபித்த கோரிக்கையை முன்வைத்து ஒரு விண்ணப்பத்தினை தமிழகத்தில் இருக்கும் அரசியற் கட்சிகள் தலைவர்கள், பிரதான ஊடகங்கள் ஆகியவற்றிக்கு அனுப்புதல்.

இதில் இதுவரையிலும் இணைந்து கொள்ளாத அமைப்புகள், சங்கங்கள் கீழ்வரும் தொலைபேசி எண்ணிலும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறவும்.

கனடிய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு
தொலைபேசி: 416-286-1307
மின்னஞ்சல்: tamilcotac@gmail.com
http://www.tamilcotac.tk/

Thursday, November 20, 2008



அண்மையில் கனடாவிற்கு வருகை தந்திருந்த மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவர்கள் ஊர்ச் சங்கங்கங்கள், பழைய மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்களுடனான சந்திப்பு கனடா தமிழர் பேரவை மண்டபத்தில் நடைபெற்றது
Posted by Picasa

Thursday, November 13, 2008

காலத்தின் தேவைகருதிய செயற்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் - கனடிய சங்கங்களின் கூட்டமைப்பு


காலத்தின் தேவைகருதிய செயற்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் - கனடிய சங்கங்களின் கூட்டமைப்பு

புதன், 12 நவம்பர் 2008, 12:44 மணி தமிழீழம் [பதிவு நிருபர்]

கடந்த நவம்பர் 1ஆம் நாள் சனிக்கிழமை, ரொரன்ரோ ஐயப்பன் கலாச்சார மண்டபத்தில் 75 ஊர்ச் சங்கங்கங்கள், பழைய மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என இணைந்து நடாத்திய புலத்தின் இணைவால் தளத்திலுள்ள உறவுகளின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்ய நடாத்திய "அரவணைப்போம்" நிகழ்வினூடாக $ 35750.00 கனடிய டொலர்கள் திரட்டப்பட்டு மக்கள் நிவாரணத்திற்கென C.A.R.E Program இடம் கையளிக்கப்பட்டுள்ளது என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு அறியத்தருகிறது. குறுகிய கால அவகாசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட "அரவணைப்போம்" நிகழ்வு பல சவால்களுக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்றதாக கடந்த நவம்பர் 9ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைப்புக்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பலரும் கருத்து வெளியிட்டனர். அதேவேளை ஒருங்கமைப்பில் குறிப்பாக நிகழ்ச்சி ஒருங்கமைப்பில் ஏற்பட்ட சவால்கள் அடையாளம் காணப்பட்டு அவை குறித்து எதிர்கால நிகழ்வுகளில் அதீத கவனம் செலுத்துவது எனவும் அக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரவணைப்போம் நிகழ்வு தொடர்பாக இன்னும் பணம் அளிக்க விரும்புவோர் அதனை C.A.R.E Program இடம் நேரடியாக கையளிக்குமாறும், அவ்விபரத்தை 416-286-1307 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறியத்தருமாறும் வேண்டப்படுகின்றீர். கடந்த காலத்தில் உரிமைக்குரல், சாவிலும்லும் வாழ்வோம், மாமனிதர் சிவநேசன் வணக்க நிகழ்வு, பொங்கு தமிழ், குருதிக்கொடை போன்ற பல கனடியத் தமிழர் பெரு நிகழ்வுக்ளில் இணைந்து காத்திரமான பங்களிப்பை ஊர்ச் சங்கங்கங்கள், பழைய மாணவர் அமைப்புக்கள், தமிழர் பொது அமைப்புக்கள் செய்திருந்ததை நினைவு கூர்ந்த நவம்பர் 9ஆம் நாள கூட்டம், இன்றைய காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு தாயக உறவுகளுக்கு வலுச்சேர்கின்ற செயற்திட்டங்களை அடையாளம் கண்டு உடன் தொடர்ந்தும் அமுல் நடத்துவதெற்கென ஒரு குழுவையும் அடையாளம் கண்டது.ஒரு வாரத்தினுள் அக்குழு அடையாளம் கண்டு வெளிப்படுத்தும் செயற்திட்டங்களை அமுல்நடத்த அனைவரும் தொடர்ந்தும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் உழைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயற்பட விரும்புகின்ற இதுவரை இணைந்துகொள்ளாத அமைப்புக்கள் 647-205-7301 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும் கனடிய சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.